×

தேர்தல் விதிமுறை அமல் குறைதீர் மனுக்களை பெட்டியில் போடலாம்

 

புதுக்கோட்டை, மார்ச் 17:தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் குறைதீர் கூட்டம் நடைபெறாது. எனவே குறைதீர் மனுக்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எதிர்வரும் “மக்களவை தேர்தல் 2024” அறிவிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு 16.03.2024 முதல்தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியிலிடுமாறு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

 

The post தேர்தல் விதிமுறை அமல் குறைதீர் மனுக்களை பெட்டியில் போடலாம் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu ,Makalavai Election 2024 ,
× RELATED தேர்தல் விடுமுறை என்பதால் புதுக்கோட்டையில் வெறிச்சோடிய கடைவீதி