- யூனியன் அரசு
- நாகப்பட்டினம்
- விடுதலை புலிகள் கட்சி
- ஆர்த்திடல், நாகப்பட்டினம்
- பாஜக அரசு
- மாவட்டம்
- அருச்செல்வன்
- செல்வரசு
- முத்துலிங்கம்
- Visika
- தின மலர்
நாகப்பட்டினம்,மார்ச்17: குடியுரிமை சட்டத்தின் கீழ் மதசார்பின்மையை சிதைக்கும் பாஜ அரசை கண்டித்து நாகப்பட்டினம் அவுரித்திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் அருட்செல்வன், செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர். நாகப்பட்டினம் நகர செயலாளர் முத்துலிங்கம் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் அப்துல்நாசர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். குடியுரிமை சட்டத்தின் கீழ் மதசார்பின்மையை சிதைக்கும் பாஜ அரசை கண்டிப்பது. மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கண்டிப்பது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒன்றிய அரசை கண்டிப்பது ஆகிய கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.