×

குளித்தலை அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது: பைக் பறிமுதல்

 

குளித்தலை, மார்ச் 17: குளித்தலை அருகே பைக்கில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் செக்போஸ்டில் குளித்தலை உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளார். அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளார். அப்போது பைக்கில் உள்ள டூல்ஸ் பாக்ஸில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த குளித்தலை மீன்கார தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் தர் (22) என்ற பெயிண்டிங் தொழிலாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் பைக்கில் கொண்டு வந்த 550 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

The post குளித்தலை அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது: பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Karur district ,Marudur ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...