×

கிருஷ்ணராயபுரம் அருகே கோவகுளத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழி மூட வேண்டும்

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 17: கிருஷ்ணராயபுரம் அருகே கோவகுளம் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். கரூர் மாவட்டம் ,கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கோவகுளத்தில் பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி வெகு நாட்கள் ஆகியும் மூடப்படாமல் உள்ளதால் அவ்வழியாக செல்லக்கூடிய பைக் ,கார், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பேருந்துகள் செல்வதில் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் குறுகிய சாலை என்பதால் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றன. பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணராயபுரம் அருகே கோவகுளத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய குழி மூட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kovakulam ,Krishnarayapuram ,Old Jayangondam ,Karur ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...