×

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

தூத்துக்குடி, மார்ச் 17: தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி(81). இவர் தனது முதல் மனைவி முனியம்மாளின் மூத்த மகன் குருசாமி, அவரது மனைவி சம்சுநிஷா ஆகியோருடன் சமீர்வியாஸ் நகரில் உள்ள வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ம்தேதி மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டின் முன்பு சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார். தகவலறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நேற்று முன்தினம் தூத்துக்குடி இந்திராநகர், எப்சிஐ குடோன் எதிரே உள்ள பகுதியைச் சேர்ந்த பாண்டியின் இரண்டாவது மனைவி கலைச்செல்வி(61) அளித்த புகாரின்பேரில் தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

The post கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Pandi ,Thoothukudi Lurthammalpuram 2nd Street ,Muniyammal ,Kurusami ,Samsunisha ,Samirvyas ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!