×

பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு

தர்மபுரி, மார்ச் 17: மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா(26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு, சவுந்தர்யாவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம், அந்த குழந்தைக்கு பால் கொடுத்த போது, திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் குழந்தையை தட்டி விட்டு தூங்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்த போது மயங்கிய நிலையில் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Chamanur ,Marandaalli ,Soundarya ,
× RELATED டூவீலரில் கடத்திய கஞ்சா பறிமுதல்