×

பரோட்டா சாப்பிட்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை, மார்ச் 17: ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி அடுத்த பாலமேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (43). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள லேத் பட்டறை ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, மஞ்சு (38) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகேயுள்ள ஓட்டலில், வேலு பரோட்டா வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பரோட்டா சாப்பிட்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Avadi ,Velu ,Balamedu, Govindarajapuram ,Ambattur ,Parotta ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!