×

மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை, மார்ச் 17: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தவர் எம்.பி.ரஞ்சன்குமார். இவர், தமிழக காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி துறை தலைவர் பதவியும் வகித்து வந்தார்.  இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ரேஸிலும் இருந்து வருகிறார். இவர், தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தன்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விடுவித்து செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த எம்.பி.ரஞ்சன்குமார் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மற்ற நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

The post மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் விடுவிப்பு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Central Chennai West District ,President ,MP Ranjankumar ,Congress ,Selvaperunthakai ,Chennai ,M. P. Ranjankumar ,Tamil Nadu Congress Party ,SC ,ST ,Tamil Nadu Congress ,Tiruvallur ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்