×

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக ரூ.5 கோடி கடன் பெற்றேன்: ‘நீங்கள் நலமா’ மூலம் தொலைபேசியில் பேசிய முதல்வரிடம் தெரிவித்த பயனாளி மகிழ்ச்சி

சென்னை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.5 கோடி கடன் பெற்றதாக ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, முகாம் அலுவலகத்தில் இருந்தபடி தொலைபேசி வாயிலாக ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் அரசு திட்டங்களால் பயன் அடைந்து வரும் பல்வேறு பயனாளிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதன் விவரம் வருமாறு:

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்த சி.விஜய்ஆனந்த் பெற்ற நன்மைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது விஜய் ஆனந்த், மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கிட தொழில் கடன் பெற்றதாக தெரிவித்தார். மேலும், தொழில் கடன் வேண்டி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவுடன் உடனடியாக அது பரிசீலிக்கப்பட்டு, வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து, அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, எவ்வித தடங்கலுமின்றி விரைவாக ரூ.5 கோடி வங்கி கடன் பெற்று, அதன்மூலம் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது நல்ல பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மகளிர் சுய உதவிக்குழுவின் கீழ் பயன்பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்த வி.பானுப்பிரியாவிடம் முதல்வர் பேசினார். சென்னை, வேப்பேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வரும் திருவண்ணாமலை மாவட்டம், வற்றாபுத்துர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பிரியதர்ஷினியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருவதாக கூறினார். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ப்ரித்தாவிடம் முதல்வர் பேசினார். அப்போது, மாணவி ப்ரித்தா, தனக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் வீட்டிற்கே வந்து, அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி வருவதாகவும், தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

The post அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக ரூ.5 கோடி கடன் பெற்றேன்: ‘நீங்கள் நலமா’ மூலம் தொலைபேசியில் பேசிய முதல்வரிடம் தெரிவித்த பயனாளி மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,M.K.Stalin ,Industry ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...