×

சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு


சென்னை: சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, கலைஞர் தலைமையிலான அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2008ம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 2019ல் வெளியிட்ட ஆணையில் மாநில அரசின் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் ஒன்றிய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெறுவதற்கும் இந்த 68 வகுப்பினர்களும் சீர்மரபினர் என அழைக்கப்படுவர் எனவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்அதில் சிரமம் உள்ளதாகவும் அதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்கு பதில் ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபினர்களுக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.

The post சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sirmarabinar ,CHENNAI ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...