×

300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு


ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பையில் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட செங்குட்டுவராயன் மலை உள்ளது. இங்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை மீறி நேற்று முன்தினம் 10 வாலிபர்கள் மலையேற்றத்துக்காக சென்றுள்ளனர். அப்போது, மலையில் இருந்து தேனீக்கள் கலைந்ததால் வாலிபர்கள் அங்குமிங்குமாக ஓடி உள்ளனர். அப்போது நத்தம் கோபால்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (25) என்ற வாலிபர் மட்டும் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடியபோது, 300 அடி பள்ளத்தில் சடலமாக கிடந்த பிரவீன் குமாரை மீட்டனர்.

The post 300 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி: ட்ரோன் உதவியுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kolkampai ,Coonoor ,Nilgiris ,Senguttuvarayan ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்...