×

டெல்லியில் அடிக்கடி போக்குவரத்து மாற்றம்; பிரதமரின் சாலை பயணத்தால் சிரமம்.! காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டெல்லியின் சாலை வழியாக நீங்கள் செல்லும் போது, உங்களின் பாதுகாப்பு முக்கியமானது. அதேநேரம் உங்களது பயணம் ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. பொதுச் சாலைகளில் பயணிப்பவர்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், நோயாளிகள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிக்கின்றனர்.

பிரதமர் வருகையை காரணம் காட்டி, பல மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. விமானங்கள், ரயில்களில் செல்வோர், மருத்துவ உதவி தேவைப்படுவோர், தேர்வுக்கு செல்வோர் பல்வேறு போக்குவரத்து ெநருக்கடிகளால் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பிரதமரின் பாதுகாப்பில் எவ்வித சமரசம் செய்யாமல், மக்களுக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். பொதுவான விஷயம் என்பதால், தாங்கள் இதை பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post டெல்லியில் அடிக்கடி போக்குவரத்து மாற்றம்; பிரதமரின் சாலை பயணத்தால் சிரமம்.! காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் மோடிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,PM ,Aadir Ranjan Choudhry ,Modi ,New Delhi ,Aadhir Ranjan Chowdhury ,People's Congress ,Kang ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...