×

ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

சென்னை: ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தலத்தில் தெரிவித்துள்ளதாவது;

“பதவிகளை தாரை வார்த்து உயர் பொறுப்பில் உள்ளவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறதா பாஜக?

SBI வங்கி தலைவரின் பணிக்காலம் அக்டோபர் 2023-ல் நிறைவடைந்த போதும், ஆகஸ்ட் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் ஆணையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஞானேஷ் குமார் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தவர் மற்றும் ராமர் கோவில் விவகாரத்தையும் ஒன்றிய அரசின் சார்பில் மேற்பார்வை செய்தவர்.

மேலும் அமலாக்கத்துறை தலைவரின் பதவியை நீட்டிக்க 2023-ம் ஆண்டு முழுக்க நீதிமன்றத்தில் பாஜக தவியாய் தவித்ததை நாடே அறியும்.

இப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பையும் சட்டத்திற்கு புறம்பாக தன் வசம் வைத்துக் கொண்டு, ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை?” – என அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

The post ஊழல் செய்ய பாஜக காட்டும் ஆர்வத்தை நாட்டின் வளர்ச்சியில் ஏன் காட்டவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister Mano Tangaraj ,Chennai ,Minister ,Mano Tangaraj ,
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...