×

தாராபுரம் – சென்னை புதிய அரசு பேருந்துக்கு வரவேற்பு

 

தாராபுரம், மார்ச்16: தாராபுரத்திலிருந்து சென்னை செல்ல போதிய அரசு பேருந்துகள் இல்லாத நிலையில், தனியார் பேருந்துகளில் பண்டிகை காலங்களில் ரூ.2000 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தாராபுரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு 2 புதிய அரசு பேருந்துகள் சேவையை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்,அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் டாக்டர்.கே.வி.சிவசங்கர், சென்னைக்கு சென்ற பேருந்தின் டிரைவர் இளங்கோ,கண்டக்டர்செம்மலை, மற்றும் கிளை மேலாளர் கணேசன்,தொமுச கிளை செயலாளர் நல்ல சேனாபதி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்தார்.மேலும் அந்த பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார்.

The post தாராபுரம் – சென்னை புதிய அரசு பேருந்துக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Chennai ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது