×

ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் 2 வாலிபர்களுக்கு 8 ஆண்டு சிறை

சிவகங்கை, மார்ச் 16: ஓடும் பஸ்சில் பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் விதித்து, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்புவனம் அருகே உள்ள தேளி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன் (34), தனியார் நிறுவன ஊழியர். அதே ஊரைச் சேர்ந்தவர் விஜய் (28), ஏசி மெக்கானிக். இவர்கள் இருவரும் கடந்த 2015 நவ.23ம் தேதி மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பஸ்சில் அவர்களுடன் பயணம் செய்த 16 வயது பிளஸ் 1 மாணவியின் துப்பட்டாவை முனீஸ்வரன் இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும், விஜய் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பூவந்தி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து முனீஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி சரத்ராஜ், ‘பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முனீஸ்வரனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.6 ஆயிரம் அபராதம், விஜய்க்கு 3 ஆண்டு சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இருவரிடம் வசூலிக்கும் அபராத தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் அரசு சார்பில் ரூ.ஒரு லட்சத்தை இழப்பீடாக சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார்.

The post ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் 2 வாலிபர்களுக்கு 8 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga Pocso Court ,Muneeswaran ,Theli ,Tiruppuvanam ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி