×

போக்சோவில் கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

 

ராமநாதபுரம், மார்ச் 16: ராமநாதபுரத்தில் போக்சோவில் கைதானவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் குமார் (45). இவர், கடந்த 2023ல் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில், கமுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் குமாரை கைது செய்து, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குமார் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில் போலீசார், குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post போக்சோவில் கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Guntas ,Pocso ,Ramanathapuram ,Kumar ,Mudugulathur ,Ramanathapuram district ,Goondas ,Dinakaran ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது