- Senthamangalam
- இராமலிங்கம் சட்டமன்ற
- கண்ணூர்பட்டி ஊராட்சி
- புதுச்சத்திரம்
- புதுச்சத்திரம் ஒன்றியம்
- தின மலர்
சேந்தமங்கலம், மார்ச் 16: புதுச்சத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி ஊராட்சியில் ரூ.41.95 லட்சத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.41.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய அங்கன்வாடி மையம், சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, சுற்றுச்சுவர் கட்டுதல், மயான சாலை உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார அட்மா குழு தலைவர் கௌதம் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, விஜயகுமார் முன்னிலை வகித்தனர். நாமக்கல் ராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி வெங்கடாஜலம், துணைத் தலைவர் ராம்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் வளர்மதி கிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா முருகேசன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் சின்ராசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ரூ.41.95 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.