×

2 வயது மகனுடன் இளம்பெண் மாயம்

 

தர்மபுரி, மார்ச் 16: ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு சின்னவத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 6 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம்தேதி, திவ்யா தனது 2வது மகன் மகித்துடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்தோஷ் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனுடன் மாயமான திவ்யாவை தேடி வருகின்றனர்.

 

The post 2 வயது மகனுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Dharmapuri ,Santhosh ,Moongilmaduvu Chinnavatthalapuram ,Ariyur ,Divya ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்