×

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இணையதள குற்ற விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் சங்கர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இணையதள குற்றங்களை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆவடி அடுத்து பட்டாபிராம், இந்து கல்லூரி பகுதியில், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில், இணையதள குற்றங்களை குறித்த விழிப்புணர்வு பேரணியை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேற்று காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்து கல்லூரி முதல் பட்டாபிராம் காவல் நிலையம் வரை நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியில், 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியில், வாகன ஓட்டிகளுக்கு இணையதள குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கமிஷனர் சங்கர் பேசியதாவது, பொது மக்கள் ஆசையை பயன்படுத்தி, பண மோசடி உள்ளிட்ட இணையதள வழி ‘சைபர் கிரைம்’ குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ‘சைபர் கிரைம்’ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, இணைய வழி பயன்பாட்டில் அலட்சியம் காட்டக்கூடாது என பேசினார்.

The post ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இணையதள குற்ற விழிப்புணர்வு பேரணி: காவல் ஆணையர் சங்கர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Aavadi Police Commissionerate ,Police Commissioner ,Shankar ,Aavadi ,Battabiram ,Hindu College ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...