×

கந்தசாமி கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர்

திருப்போரூர்: கோடைக்காலம் தொடங்கி உள்ளநிலையில், தமிழ்நாடு முழுவதும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நீர் மோர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில், கோயில் மேலாளர் வெற்றிவேல் முருகன், பக்தர்களுக்கு மோர் வழங்கினார். இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று மோர் வாங்கி அருந்தி சென்றனர். நேற்று பங்குனி மாத கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை சிறப்பு தரிசனம் செய்தனர்.

The post கந்தசாமி கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர் appeared first on Dinakaran.

Tags : Kandasami Temple ,Thiruporur ,Tamil Nadu ,Tiruporur Kandasami Temple ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...