×

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

செங்கல்பட்டு: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 3.15 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, மற்றும் பிற்பகல் 2, 2.30, மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  அதேபோல், காலை 11, 11.50, மற்றும் மதியம் 12.30, 12.50, 1.35, 2.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் காலை 10.5, 10.15, 10.25, 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, மற்றும் பிற்பகல் 2.15, 4.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 9.40, 10.55, 11.5, 11.30 மற்றும் மதியம் 12, 1 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும், பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை காலை 11.55, 12.45, மதியம் 1.35, 1.45, 1.55 மற்றும் பிற்பகல் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.40, 9.30, 10.55, 11.5, 11.30, 12, 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

* பயணிகள் கோரிக்கை
பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், செங்கல்பட்டு பணிமனையில் இருந்து பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம் வரை காலையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து செங்கல்பட்டு – காஞ்சிபுரம் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* கூடுதல் பேருந்து சேவை
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த நேரத்தில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க இந்த வழித்தடத்தில் கூடுதல் சேவைகளை இயக்க போக்குவரத்து கழகத்திடமும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் தெற்கு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது.

 

The post பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coastal ,Chengalpattu ,Southern Railway ,Tambaram ,Chennai Beach ,South… ,Tambaram Southern Railway ,Dinakaran ,
× RELATED மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும்...