×

பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 6வது வாரமாக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது.

இந்நிலையில், கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 44 ,Suburban Rail Service ,Chennai ,Southern Railway ,Dinakaran ,
× RELATED 44 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள 3...