×

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு.. நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்..!!

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடா்பாக அளித்துள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் புகழேந்தி டெல்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் தங்கள் தரப்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகழேந்தி தொடர்ந்த மனுவில் நாளை எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக இந்த மனு மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது நாளை உத்தரவு பிறக்கப்படுகிறது. நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு.. நாளை உத்தரவு பிறப்பிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Delhi ,Election Commission ,ADMK ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...