×

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்திப்பு.. பம்பரம் சின்னம் வழங்க கோரிக்கை..!!

சென்னை: பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. அளித்த விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில், பம்பரம் சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துள்ளார். பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி வைகோ விண்ணப்பத்தின் மீது 2 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவின் நகலை சத்ய பிரதா சாகுவிடம் வைகோ வழங்கினார்.

The post தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவுடன் வைகோ சந்திப்பு.. பம்பரம் சின்னம் வழங்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Chief Electoral Officer ,Satya Pratha Chagu ,CHENNAI ,Madhyamik Party ,General Secretary ,Election Commission ,
× RELATED மக்கள் பணியாற்றுவதற்காக எம்எல்ஏ...