×

பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு

பெங்களூரு: பாலியல் புகாரில் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்.2ம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. POCSO சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

The post பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் புகார்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Eduarapa ,Bengaluru ,Karnataka ,Edyurappa ,Eduorappa ,Dinakaran ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!