×

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்

 

திருத்துறைப்பூண்டி, மார்ச் 15: திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தேர்தல் 2024- 29 தொகுதிக்கு உட்பட்ட 166 திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்களுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

166 திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான தமிழ் மணி தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் தாசில்தார் கார்ல் மார்க்ஸ், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Polling Station Officers ,Thiruthuraapoondi ,Nagapattinam Parliamentary Elections ,Thiruthurapoondi ,Assembly Constituency ,Polling ,Study ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் ஊரக பகுதிகளில் ஆர்வத்துடன் வாக்களித்த கிராம மக்கள்