×

யூனியன் அலுவலகத்தில் ஓஏ வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: இளநிலை உதவியாளர் மீது வழக்கு

 

வத்திராயிருப்பு, மார்ச் 15: யூனியன் அலுவலகத்தில் ஓஏ வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக இளநிலை உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் சிம்சன். இவர் வத்திராயிருப்பு பலகுடி வடக்கு தெருவை சேர்ந்த ரவி(55) என்பவரது மகளுக்கு வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும் இதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டுமெனவும் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய ரவி சிம்சனிடம் ரூ.3.25 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிம்சன் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரவி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சிம்சன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரவி திருவில்லிபுத்தூர் நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். விசாரணை செய்த நீதிமன்றம், காவல்துறையினர் இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் பேரில் வத்திராயிருப்பு காவல் துறையினர் சிம்சன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post யூனியன் அலுவலகத்தில் ஓஏ வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: இளநிலை உதவியாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vathrayiru ,Rs ,Simpson ,Vathrayiru Panchayat Union ,OA ,Dinakaran ,
× RELATED வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்