×

மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா

 

திருப்பூர், மார்ச்15: திருப்பூர், செல்லம்மாள் காலனி, மாநகராட்சித் தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு 24 வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நாகராஜ் கணேஷ்குமார் வரவேற்றார். திருப்பூர் வட்டாரக் கல்வி அலுவலர் முஷ்ரக் பேகம் ,முன்னாள் கவுன்சிலர் சின்னச்சாமி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொன்.பழனிச்சாமி பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி வளாகத்தின் முன்பு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடினர்.

மேலும் தமிழ், ஆங்கில பேச்சுபோட்டிகளும் நடைபெற்றது.தொடர்ந்து மாவட்ட அளவில் சிலம்பம், கராத்தே, ஓவியப்போட்டி ஆகியவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் சிறந்த நன்கொடையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் நாகராஜ்க்கு வட்டாரக் கல்வி அலுவலர் அரசின் நினைவுப் பரிசினை வழங்கினார். தொடர்ந்து பலர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Triennial ,Corporation ,Primary School ,Tirupur ,Thirupur, ,Chellammal Colony ,Municipal Primary School ,24th Ward ,Councilor Nagaraj ,Principal ,Nagaraj Ganesh Kumar ,Regional Education Officer ,Municipal Primary ,School ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா