×

மருதுசேனை அமைப்பின் நிறுவனர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கள்ளிக்குடி: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). மருதுசேனை அமைப்பின் நிறுவனர். இவர், கள்ளிக்குடி அகத்தாபட்டி அலுவலகத்திலிருந்து நேற்று காரில் புறப்பட்டார். சொந்த ஊரான மையிட்டான்பட்டிக்கு செல்ல விலக்கு ரோட்டில் அவரது கார் திரும்பியது.

அப்போது விருதுநகரிலிருந்து பைபாஸ் சாலையில் வந்த மற்றொரு கார், இவரது கார் மீது மோதியது. மேலும், அதிலிருந்த 7 பேர் இவரது கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது. இதில் காரின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து ஆதிநாரயணன் கள்ளிக்குடி போலீசில் புகார் அளித்தார்.

The post மருதுசேனை அமைப்பின் நிறுவனர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Marutusena ,Kallikudi ,Adinarayanan ,Mayitanpatti ,Madurai district ,Marutusenai ,Kallikkudi Agathapatti ,Maiitanpatti ,Virudhu Nagar ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் குண்டு வீச்சு,...