×

மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவின் உருவப் படத்தை எரித்து மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மார்ச் 15: தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ. 1000 வழங்குவது குறித்து இழிவாக பேசிய தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை கண்டித்தும் அவரது உருவ படத்தை எரித்தும் திமுக மகளிர் தொண்டர் அணியினர் போராட்டம் நடத்தினர். அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய மகளிர் குழு ஆணைய உறுப்பினரும், பாஜ பிரமுகருமான நடிகை குஷ்பு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ₹1000 வழங்குவது குறித்து இழிவாக பேசியிருந்தார். இதனைக் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டர் அணி, மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜி.கோவிந்தம்மாள், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். நகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி சீனிவாசன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் காந்திமதி, துணை அமைப்பாளர்கள் வேளாங்கண்ணி, தமிழ்மொழி, பூங்கோதை, லட்சுமி, நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர், தொண்டர் அணியினர் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் குஷ்புவின் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும் அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவின் உருவப் படத்தை எரித்து மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Tiruvallur ,Tamil ,Nadu ,Chief Minister ,DMK ,National Commission for Women ,Khushpu ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...