×

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னூர் உழவர்சந்தை பகுதியில் வேட்பாளர் ராஜேஷ், கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த தில்லைநகர் போலீசார், பேரணியாக செல்ல அனுமதி பெறவில்லையென கூறி வேட்பாளர் ராஜேஷ், சாட்டை துரைமுருகன் உள்பட 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் சிறைவைத்து மாலையில் விடுவித்தனர்.

The post நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Naam Tamilar Party ,Rajesh ,Trichy parliamentary ,Party State Policy ,Propagation Secretary ,Chattai Duraimurugan ,Tennoor Farmers ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...