×

பனீரும் ரூ.10 குறைத்து விற்பனை ஆவின் நெய் விலையில் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி: மார்ச் 31 வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இது மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆவின் நிறுவன இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவன இயக்குநர் வினீத் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பனீர் வகைகளை 10,000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய், கடந்த மூன்று மாதங்களாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, இதை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் ஆவின் நெய்யை தள்ளுபடி விலையில் வரும் 31ம் தேதி வரை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பனீர் கடந்த மூன்று மாதங்களாக சலுகை விலையில் 200 கிராம்ரூ.120 லிருந்து ரூ.10 குறைத்து ரூ.110க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியை தொடர்ந்து நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post பனீரும் ரூ.10 குறைத்து விற்பனை ஆவின் நெய் விலையில் லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி: மார்ச் 31 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Paneer ,CHENNAI ,Aavin ,Tamil Nadu ,Vineeth ,Avin ,Tamil Nadu Cooperative Milk Producers ,Avin Ghee ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் ஐயா...