×

ஜனவரியில் மட்டும் 1.37 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: சென்னையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத் துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021ம் ஆண்டில் 57,622ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022ம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023ம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 1,37,563 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதேபோன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021ல் 11,53,36,719ஆக இருந்து, 2022ல் 21,85,84,846 ஆகவும், 2023ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது 2024ம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 2,81,96,899 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள், உலக சுற்றுலா பயணிகளின் விருப்பமான முக்கிய சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் சுற்றுலாத்துறை இயக்குநர் சமயமூர்த்தி, துணைச் செயலாளர் வீருசாமி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் கமலா, சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ் பங்கேற்றனர்.

The post ஜனவரியில் மட்டும் 1.37 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ramachandran ,Chennai ,Tourism Minister ,Tamil ,Nadu ,India ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்