×

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

சென்னை: ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் அண்மையில் ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகிவிட்டார். கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலில் ஜாபர் சாதிக் கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் சதாவை கைது செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் குடோனில் NCB சோதனை செய்து வருகின்றனர். சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சோதனை நடைபெற்று வருகிறது. சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

The post ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Central Narcotics Control Unit ,Zafar Sadiq ,Chennai ,Jaber Sadiq ,godown ,Delhi ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...