×

“இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’’பட்டுக்கோட்டையில் திண்ணை பிரசாரம் தீவிரம்

 

பட்டுக்கோட்டை, மார்ச் 14: பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரம் நேற்று முதல் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் துவங்கியுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சி 1வது வார்டு நரியம்பாளையம் பகுதியில் தொடங்கிய இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரசாரத்தை பட்டுக்கோட்டை எம்எல்ஏ. அண்ணாதுரை பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், பட்டுக்கோட்டை தொகுதி பார்வையாளருமான சுபசரவணன், நகர திமுக செயலாளர் செந்தில்குமார், நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், 1வது வார்டு நகராட்சி கவுன்சிலர் சாந்திகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ. அண்ணாதுரை தலைமையில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று அவர்களது இல்லங்களின் திண்ணைகளில் அமர்ந்து திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளையும், தற்போது 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் துல்லியமாக எடுத்துக் கூறி அவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ. அண்ணாதுரை நரியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது அந்த வீட்டிலிருந்த அரசு பள்ளி மாணவியிடம் புதுமைப்பெண் திட்டம் குறித்து கேட்டார். அதற்கு அந்த மாணவி சட்டென அந்த திட்டத்தின் கீழ் நான் ஆயிரம் ரூபாய் பெறுகிறேன் என்று உற்சாகத்துடன் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் இந்த பிரசாரம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

The post “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’’பட்டுக்கோட்டையில் திண்ணை பிரசாரம் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Batukkottai ,Timuka ,Tamil Nadu ,Stalin ,Patukkot ,Tanji ,
× RELATED திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில்...