×

விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

 

மயிலாடுதுறை, மார்ச்14: மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டி 2023- 24-களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார். அப்போது கலெக்டர் பேசியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, கல்வி சாரா செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் உள்ளார்ந்த கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 2 ஆண்டுகளாக பள்ளி, வட்டாரம். மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் அக்டோபர்-2023ல் நடைபெற்றது. இப்போட்டிகளில் 26371 மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலும், 6425 பேர் வட்டார அளவிலும், 2129 பேர் மாவட்ட அளவிலான போட்டியிலும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 385 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மாநில அளவிலான போட்டியில் 11 மாணவர்கள் வெற்றிபெற்றனர்.

The post விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,District Collector ,Mahabharathi ,Art festival competition 2023-24 ,Kittappa ,Municipal ,High School ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரி...