×

ரயில் மோதி வாலிபர் பலி

தூத்துக்குடி, மார்ச் 14: தூத்துக்குடியில் ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், மீளவிட்டான் -தூத்துக்குடி ரயில் நிலையம் இடையே வந்து கொண்டிருந்தபோது, சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் தண்டவாளத்தின் ஓரத்தில் அமர்ந்து இருந்துள்ளார். ரயில் வண்டி பைலட் ஹாரன் அடித்ததும் அவர் எழுந்துள்ளார். அப்போது அவர் மீது ரயில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். ரயில் மோதி இறந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மீளவிட்டான் விஏஓ கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரயில்வே எஸ்ஐ மகாகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

The post ரயில் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,Muthunagar Express ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...