×

ஒரேநாடு, ஒரே தேர்தல் கோவிந்த் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று தாக்கல்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை இன்று ஜனாதிபதி முர்முவிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. அந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்பட பல்வேறு தரப்பிடம் ஆலோசனைகளை மேற்கொண்டது. இந்த குழு தற்போது ஆலோசனைகளை முடித்துக்கொண்டு அறிக்கையை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் குழு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post ஒரேநாடு, ஒரே தேர்தல் கோவிந்த் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று தாக்கல் appeared first on Dinakaran.

Tags : United Nations, Sole Election Govind Committee ,New Delhi ,Former ,President ,Ramnath Gowind ,Murmuy ,United Nations ,Single Election Committee ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...