×

மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக உடல் மீட்பு

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல், விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை கூலி தொழிலாளர்கள் கரும்பு அறுவடை பணிக்கு வந்தனர். அப்போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் தோட்டத்தின் மையப்பகுதியில் சென்று பார்த்தனர். அப்போது நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பழனிவேல் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர் தண்டராம்பட்டு ஊராட்சி டேம் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ராஜேஸ்வரி (30) என்பது தெரியவந்தது. மேலும் மனநலம் பாதித்திருந்த ராஜேஸ்வரி கடந்த 9ம் தேதியில் இருந்து காணவில்லை என்று அளித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வந்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு தண்டராம்பட்டு போலீசார், இளம் பெண்ணின் உடல் நிர்வாணமாக வீசப்பட்டுள்ளதால் அவரை பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? கரும்பு தோட்டத்தில் நிர்வாணமாக உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Thandarampatu ,Palanivel ,Radhapuram ,Thiruvannamalai district ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...