×

நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு

நாமக்கல்: நாமக்கல்லில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்றுக் கொண்டார். சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழா, புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து துணைத்தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

The post நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Rajeskumar ,Namakkal Co-operative Bank ,Namakkal ,District Central Co-operative Bank ,Namakkal District Central Co-operative Bank ,Salem ,Collector ,Uma Chief ,Namakkal Co- ,Rajeskumar MP ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...