×

சென்னைக்கு தனிக்குடித்தனம் போக திட்டமிட்ட நிலையில் கணவரை அறையில் பூட்டிவிட்டு புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: திருமணமான 21 நாளில் சேலத்தில் சோகம்

சேலம்: சேலத்தில் திருமணமான 21 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரை தனியறையில் வைத்து பூட்டி விட்டு தூக்கில் தொங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (34). இன்ஜினியரான இவர், சென்னை தாம்பரம் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சேலம் பூலாவரி கீழ்தெருவை சேர்ந்த இன்ஜினியர் சொர்ணலதாவுக்கும் (32) கடந்த 21 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமணத்தம்பதிகளான ஆறுமுகமும், சொர்ணலதாவும் கோயில் பண்டிகைக்காக பூலாவரிக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் காலை சொர்ணலதாவின் பெற்றோர் மற்றும் பாட்டி வெளியே சென்றதால் புதுமணத்தம்பதிகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அன்று மதியம் 1 மணியளவில் சொர்ணலதாவின் பாட்டி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள ஒரு அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் கதவை திறந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகத்தை எழுப்பி சொர்ணலதா குறித்து பாட்டி கேட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் சொர்ணலதா அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து ஆறுமுகம் மற்றும் பாட்டி அழுது புலம்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சொர்ணலதா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இன்னும் 2 நாளில் சென்னைக்கு குடிபோக திட்டமிட்டிருந்ததாகவும் ஆறுமுகம் தெரிவித்தார். திருமணமான 21 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்திருப்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

The post சென்னைக்கு தனிக்குடித்தனம் போக திட்டமிட்ட நிலையில் கணவரை அறையில் பூட்டிவிட்டு புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை: திருமணமான 21 நாளில் சேலத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Arumugam ,Vazhappadi Belur ,Salem district ,
× RELATED போதையில் தகராறு செய்த கணவர் அடித்து கொலை? மனைவியிடம் போலீஸ் விசாரணை