×

எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!!

சென்னை: திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு வாபஸ் ஆனதை அடுத்து பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் பொன்முடி அமைச்சராகிறார். இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்ட மன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்டிருந்த இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஆளுநர், தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலை அல்லது நாளை அமைச்சராக பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

The post எம்.எல்.ஏ.வாக தொடர்வதை அடுத்து மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி!! appeared first on Dinakaran.

Tags : M. L. A. ,Chennai ,Ponmudi ,Thirukovilur ,L. A. ,Supreme Court ,
× RELATED திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம்...