×

விடுதியில் தங்கி பயின்ற பள்ளி மாணவன் மாயம்

 

திருச்சி, மார்ச் 13: பள்ளி ஹாஸ்டலில் இருந்து மாயமான மாணவன் குறித்து தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சுரக்குளத்துார் களத்து மேட்டுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் பரத் (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லட்சுமணன் மகனை திருச்சி மேலப்புதுார் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியின் ஹாஸ்டலில் சேர்த்து 9ம் வகுப்பு படிக்க விட்டிருந்தார். நேற்று முன்தினம் வகுப்பறையில் இருந்த பரத், வயிறு வலிப்பதாக கூறிவிட்டு வௌியில் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் மாணவன் வகுப்பறைக்கு திரும்பவில்லை. இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜோஸ்வா ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

The post விடுதியில் தங்கி பயின்ற பள்ளி மாணவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Trichy ,Lakshmanan ,Kalatu Metutheru ,Surakkulattur ,Tiruvannamalai district ,Bharat ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்