×

வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது

 

சேலம், மார்ச் 13: சேலத்தில் சாப்பாடு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் அதிரடடியாக கைது செய்தனர்.சேலம் அழகாபுரம் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (33). இவர் நேற்றுமுன்தினம் வெண்ணங்கொடி முனியப்பன் கோயிலில் உறவினர்களுடன் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் மதிய உணவு வழங்கினார். அப்போது உறவினர் ராமு என்பவர் சாப்பாடு வழங்குவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் குணசேகரனை ராமு தாக்கி விட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து ராமுவின் வீட்டுக்கு சென்ற குணசேகரன், அங்கிருந்த ராமுவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி விட்டு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ராமு, குணசேகரனின் வீட்டுக்கு தனது நண்பர்கள் 6 பேருடன் சென்று அங்கிருந்த குணசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில் ராமு தான் வைத்திருந்த கத்தியால் குணசேகரனை சரமாரியாக குத்தினார். பின்னர் ராமு மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பினர். இதை யடுத்து படுகாயமடைந்த குணசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமு மற்றும் அவரது நண்பர்களான ஜீவா மணி, கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவிமாறன், பாரதிராஜா உள்பட சிலரை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Gunasekaran ,Salem Alaghapuram Gallimedu ,Vennangodi Muniappan Temple ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...