×

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: ஆவடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனா (28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் நிதிஷ்குமார் (32). கொரட்டூர் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 11 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இதில், நிதிஷ்குமார் வேலை சுமை அதிகமாக இருந்ததால் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால், ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மது அருந்திவிட்டு இருந்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற மீனா மாலையில் வீடு திரும்பியபோது, நீண்ட நேரம் தட்டியும் நிதிஷ்குமார் கதவை திறக்கவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனக்கு தானே புடவையால் பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Meena ,Avadi Gandhinagar ,Nitish Kumar ,Koratur ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...