×

தமிழ்நாடு முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: 5 ஏஎஸ்பிகளுக்கு எஸ்பிகளாக பதவி உயர்வு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 5 ஏஎஸ்பிகள் எஸ்பிகளாக பதவி உயர்வு உட்பட 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா நேற்று பிறப்பித்த உத்தரவு:

*வண்டலூர் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குநராக பி.சி.தேன்மொழி நியமனம்.

*சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

*மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம்.

*சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ்.வனிதா நியமனம்.

*சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி.ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னையில் காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே.ஆதிவீரபாண்டியன் நியமனம்

*சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமனம்.

*காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு

*உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.

*அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு, திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.

*திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர்வு.

*மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கரட் கரூனுக்கு பதவி உயர்வு.

The post தமிழ்நாடு முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: 5 ஏஎஸ்பிகளுக்கு எஸ்பிகளாக பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Home Secretary ,Amuda ,Amutha ,Vandalur Disability Constable Training College… ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...