×

ஜவ்வாதுமலையில் விலங்குகளை வேட்டையாட சென்ற பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை

* சடலம் தீ வைத்து எரிப்பு
* மாயமான நண்பர்களுக்கு வலை

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோவில் கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ஏழுமலை(27). இவர் பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான காசி, ஜெயராமன் உட்பட 8 பேரும் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கடந்த 8ம் தேதி இரவு அருகில் உள்ள ஜவ்வாதுமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். மறுநாள் இரவு 9 மணியளவில் ஏழுமலை தனது மனைவி மற்றும் பெற்றோருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பிறகு ஏழுமலையிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து புகாரின்பேரில் ஏழுமலை உட்பட 9 பேரையும் போலீசார், வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் திருப்பத்தூர் வனப்பகுதியை ஒட்டிய மீன்மடுவு என்ற பகுதியில் மாயமான ஏழுமலை சடலம் தீயிட்டு எரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஆய்வு செய்ததில் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஏழுமலையின் சடலத்தை சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார், நண்பர்கள் 8 பேருடன் வனப்பகுதிக்குள் சென்ற ஏழுமலை அங்கு அவர்களுக்கு இடையே நடந்த தகராறில் சுட்டுக்கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான 8 பேரையும் போலீசாரும் வனத்துறையினரும் இணைந்து வனப்பகுதியில் தீவிரமாக தேடிவருகின்றனர்.

 

The post ஜவ்வாதுமலையில் விலங்குகளை வேட்டையாட சென்ற பாஜ நிர்வாகி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Javwadumalai ,Sengam ,Govindaraj ,Yehumalai ,Javvadumalai ,Adivaram ,Temple Kollai Village, Tiruvannamalai District ,BJP.… ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி