×

யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்கிறார் ஜெகன்மோகனை கண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு பயம்: அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: ஜெகன்மோகனை தனியாக எதிர்கொள்ள முடியாமல் பயத்தால் சந்திரபாபு யார் வந்தாலும், கூட்டணியில் சேர்த்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர் என்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் ரோஜா கூறினார். திருப்பதி ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களிடம் அமைச்சர் ரோஜா கூறியதாவது: தேர்தலில் அனைத்து இடங்களிலும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வெற்றி பெற்று ஜெகன்மோகன் முதல்வராக வேண்டும் என ஏழுமலையானை வேண்டிக்கொண்டேன்.

மாநிலத்தில் தற்பொழுது பெண்கள் சுதந்திரமாக பேசும் உரிமையைக் கூட ஜனசேனாவும், தெலுங்கு தேசம் கட்சியினரும் எதிர்தாக்குதல் நடத்துகின்றனர். ஜெகன்மோகனை தனியாக தேர்தலில் எதிர்கொள்ள முடியாமல் யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்களை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திக்க சந்திரபாபு திட்டமிட்டுள்ளார். என்ன செய்தாலும் மீண்டும் ஜெகன் மோகன் ஆட்சியை கைப்பற்றி இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார்.

The post யார் வந்தாலும் கூட்டணியில் சேர்க்கிறார் ஜெகன்மோகனை கண்டு சந்திரபாபு நாயுடுவுக்கு பயம்: அமைச்சர் ரோஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Jaganmohan ,Minister ,Roja ,Thirumalai ,Swami ,Chandrababu ,Tirupati ,Andhra ,Tourism ,Seven Hills ,
× RELATED ஜெகன்மோகனுக்கு பாடம் புகட்ட வேண்டும்;...