×

போராட்டம் எதுக்கு நடக்குதுனு கூட்டிட்டு வந்தவங்கள கேளுங்க…அதிமுக மாஜி அமைச்சர் நடத்திய போராட்டத்தில் பெண்கள் காமெடி

கடலூர்: போராட்டம் எதுக்கு நடக்குதுனு கூட்டிட்டு வந்தங்கள கேளுங்க… என்று அதிமுக மாஜி அமைச்சர் நடத்திய போராட்டத்தில் கலந்த கொண்ட பெண்கள் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் போதை பொருள் எதிராக மனித சங்கலி போராட்டம் நேற்று நடந்தது. கடலூரில் அதிமுக சார்பில் போதை பொருள் எதிராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி நடைபெற்றது.

இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்ட பெண்கள் எதற்கு நிற்கிறோம் என்று கூட தெரியாமல் சும்மா கைக்கோர்த்து நின்றனர். இதுகுறித்து அவர்களிடம், ‘என்ன கோரிக்கைக்காக போராட்டம் நடத்துகிறீர்கள்’ என்று கேட்டனர். அப்போது அவர்கள், ‘என்ன கோரிக்கை என்று எங்களுக்கு தெரியாது. கூப்பிட்டாங்க வந்தோம். என்ன கோரிக்கைக்கு என்று எங்களை அழைத்து வந்தவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

The post போராட்டம் எதுக்கு நடக்குதுனு கூட்டிட்டு வந்தவங்கள கேளுங்க…அதிமுக மாஜி அமைச்சர் நடத்திய போராட்டத்தில் பெண்கள் காமெடி appeared first on Dinakaran.

Tags : minister ,ADMK ,Cuddalore ,AIADMK ,Tamilnadu ,
× RELATED உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு...