×

சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி உள்பட 5 பேர் கைது

திருப்பூர்: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 9-ம் தேதி வெள்ளகோவில் பகுதியில் நடந்த தேர் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறுமி சென்றுள்ளார். கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வழக்கில் பிரபாகர், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK IT ,Tirupur ,Chariot Festival ,Vellakovil ,AIADMK I.D. ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...